கொரோனாவால் வருமானம் இழந்த இசைக்கலைஞர்கள் – ஃபேஸ்புக் நேரலையில் கச்சேரி நடத்தி நிதி திரட்டல்!

Published by
Rebekal

கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்த இசைக்கலைஞர்கள் பேஸ்புக் நேரலையில் மூலம் கச்சேரி நடத்தி நிதி திரட்டி வருகின்றனர்.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், திருச்சி மாவட்டத்திலும் கொரானாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சாதாரணமாகவே கோயில் விழாக்கள், திருமண விழாக்கள் சிறப்பு நிகழ்வுகள் இன்னிசைக் கச்சேரிகளில் பாடும் இசை கலைஞர்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ஆனால் எப்படி மற்ற தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் தொழில் செய்பவர்கள் வேலைகள் கொரோனாவால் முடக்கப்பட்டதோ, அதைக் காட்டிலும் அதிகமாக இசை கலைஞர்களுக்கு சுத்தமாக வருவாய் இல்லாத நிலையில் அவர்கள் மிகவும் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மக்களை மகிழ்விக்கும் இசை கலைஞர்களுக்கு இசையால் இணைவோம் என்கிற தாரக மந்திரத்தோடு திருச்சி குருப்பிரியா என்கிற இசைக்குழுவினர் சேர்ந்து முகநூலில் நேரலையில் வாரத்திற்கு ஒரு நாள் இசை கச்சேரி நடத்தி, நிதி திரட்டி அரிசி உள்ளிட்ட பொருட்களையும் திரட்டி வாய்ப்பும் வருவாயும் சுத்தமாக இல்லாமல் தவித்து வரும் இசை கலைஞர்களுக்கு உதவி வருகின்றனர். கடந்த மூன்று வாரங்களாக நடைபெறும் இந்த பணியின் மூலம் நலிவுற்ற கலைஞர்களுக்கு எங்களால் இயன்ற உதவியை செய்ய முடிகிறது என கூறியுள்ளார் இசை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் குருப்பிரியா சுந்தரேசன்.

Published by
Rebekal

Recent Posts

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

1 minute ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

14 minutes ago

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

1 hour ago

“இப்போவாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா தமிழர்களின் ஒரே கேள்வி” – தங்கம் தென்னரசு!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…

2 hours ago

கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்கள் 3D முறையில் வடிவமைப்பு.!

மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…

2 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்.!

நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…

2 hours ago