உடல் நலம் குறித்து, அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
மக்களவை உறுப்பினரும், திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி திமுக கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த சில வாரங்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த இவருக்கு, கடந்த 3-ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனை அடுத்து, இவர் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். அதன் பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள நிலையில், இது தொடர்பாக கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அதில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, என்னைத் தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறேன். மருத்துவமனையில் எனக்கு தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்படுகின்றன எனது உடல் நலம் குறித்து, அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.’ என பதிவிட்டுள்ளார்.
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…