Actor Sathyaraj - NTK Party Leader Seeman - ADMK Chief Secretary Edapadi Palanisamy [File Image]
திருச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நிகழ்ந்த விழாவில் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறினார்.
மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாடு பற்றிய கேள்விக்கு, பதில் கூறிய சீமான், மதுரை மாநாடு முடிந்து 4,5 நாள் ஆகிவிட்டது. இதுவரை தமிழகத்தில் எந்த மாற்றமும் நிகழவில்லை. ஆந்த மாநாடு அவர்கள் கட்சிக்குள், கட்சியினருக்கு ஓர் உற்சாகம் கிடைக்கும்
முதலில் கட்சி எம்ஜிஆர் வசம் இருந்தது. அடுத்து ஜெயலலிதா வசம் இருந்தது. தற்போது எடப்பாடி பழனிச்சாமி வசம் உள்ளது. கட்சி எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது என அவர்கள் காட்டிக்கொள்கிறர்கள் அவ்வளவுதான் என அதிமுக மதுரை மாநாடு பற்றி கூறினார்.
புரட்சி தமிழர் எடப்பாடி பழனிச்சாமி என அதிமுக தொண்டர்கள் கூறுவதற்கு பதில் கூறிய சீமான், புரட்சி தமிழன் என்றால் எங்களுக்கு எப்போதுமே சத்யராஜ் தான். புரட்சி தமிழர் எடப்பாடி பழனிச்சாமி என அழைத்துக்கொண்டால் அது அவர்கள் விருப்பம். புரட்சி எனும் சொல் அவளோ கேவலப்பட்டு போய் இருக்குது என விமர்சித்தார்.
நாடளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி கேட்கையில், எங்கள் கொள்கை முடிவு தனித்து தான் போட்டியிட வைக்கிறது. எங்கள் கொள்கையோடு யாரேனும் ஒத்துப்போய் எங்கள் கூட்டணிக்கு வந்தால், பிறகு கூட்டணி பற்றி பேசலாம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…