நயினார் நாகேந்திரனின் பேச்சு : எடப்பாடி பழனிசாமியிடம் வருத்தம் தெரிவித்த அண்ணாமலை..!

Published by
லீனா

நயினார் நாகேந்திரனின்  கருத்து பாஜகவின் நிலைப்பாடு இல்லை. வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்துள்ளேன் என அண்ணாமலை பேட்டி. 

பாஜக சார்பில் நேற்று வள்ளுவர் கோட்டத்தில் அரியலூர் மாணவி தற்கொலை வழக்கில் நீதி வேண்டி உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற நிலையில், இதில் பாஜக மூத்த தலைவர்கள், எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன் பேசுகையில், தமிழ்நாட்டில் அதிமுக எதிர்கட்சியியாக செயல்படவில்லை. பாஜக எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும் கூட துணிந்து கேள்வி கேட்கிறது. சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை. அதிமுக மக்கள் பிரச்சினையை சட்டமன்றத்தில் எப்போதுமே பேசுவதில்லை என்று தெரிவித்திருந்தார்.

இவரது இந்த பேச்சு சர்ச்சையான நிலையில், இதற்கு அதிமுக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

 அப்போது பேசிய அவர்,  நயினார் நாகேந்திரனின்  கருத்து பாஜகவின் நிலைப்பாடு இல்லை. வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்துள்ளேன். அதிமுக எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு  விவகாரத்தில் சிறப்பாக போராடி வருகிறது என தெரிவித்துள்ளார்.

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

6 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

7 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

9 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

9 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

10 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

11 hours ago