பொய் கூறுவதையே கலாச்சாரமாக கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியால் மக்களுக்கு எப்படி சேவை செய்ய முடியும்?
சமீபத்தில் புதுச்சேரி சென்ற காங்கிரஸ் கட்சியின் எம்.பி.ராகுல் காந்தி, சோலை நகர் பகுதியில் உள்ள கடலோர மக்களோடு உரையாற்றினார். அப்போது பேசிய மூதாட்டி ஒருவர், மழை, புயலினால் பாதிக்கப்பட்ட போது, புதுச்சேரி முதல்வரான நாராயணசாமி சந்தித்து, நிவாரணம் வழங்கவில்லை என குற்றம்சாட்டினார்.
ஆனால், புதுச்சேரி முதல்வர், அதை ராகுல் காந்தியிடம் மொழி பெயர்த்து கூறும் போது, மழை, புயலினால் பாதிக்கப்பட்ட போது சந்தித்து நிவாரணம் வழங்கியதாக ராகுல் காந்தியிடம் மாற்றி கூறினார். நாராயணசாமியின் இந்த செயல் கடும் விமர்சனத்திற்குள்ளானது.
இந்நிலையில், பிரதமர் மோடி, கோவை மொடிசியா அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு நாராயணசாமியின் இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் மோடி, சொந்த கட்சி தலைவரிடம் நாராயணசாமி பொய் பேசியுள்ளார். தன் மக்களை ஏமாற்றியுள்ளார். பொய் கூறுவதையே கலாச்சாரமாக கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியால் மக்களுக்கு எப்படி சேவை செய்ய முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…