வேட்புமனு தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் – சரத்குமார் அறிக்கை

Published by
பாலா கலியமூர்த்தி

வேட்புமனு தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று சமத்துவம் மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கி ,  வரும் 19ம் தேதி வரை சனி, ஞாயிறை தவிர வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அரசியல் தலைவர்கள் பலரும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி வரும் தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் 37 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், வேட்புமனு தாக்கல் செய்ய 6 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், அதிலும் இரண்டு நாட்கள் கடந்து இன்னும் 4 தினங்கள் தான் உள்ளது. இதில் தற்போது நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால், வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் புதிய வங்கிக்கணக்கு துவங்க முடியாமல், வேட்புமனு தாக்கல் செய்ய முடியவிலை என கூறி, வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தமிழகத்தில் பிரதமர் மோடி துவக்கி வைக்கவிருக்கும் திட்டங்கள் என்னென்ன?தமிழகத்தில் பிரதமர் மோடி துவக்கி வைக்கவிருக்கும் திட்டங்கள் என்னென்ன?

தமிழகத்தில் பிரதமர் மோடி துவக்கி வைக்கவிருக்கும் திட்டங்கள் என்னென்ன?

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி, இன்று, நாளை (26,27) ஆகிய இரு நாட்கள் தமிழகத்திற்கு வருகை தருகிறார். இந்தப்…

17 minutes ago
மதுரையில் நடக்கும் தவெக-ன் 2து மாநாடு நடக்கும் இடத்தில் மணல் புயல்.!மதுரையில் நடக்கும் தவெக-ன் 2து மாநாடு நடக்கும் இடத்தில் மணல் புயல்.!

மதுரையில் நடக்கும் தவெக-ன் 2து மாநாடு நடக்கும் இடத்தில் மணல் புயல்.!

மதுரை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 25ம் தேதி அன்று நடைபெற…

45 minutes ago
ராகுல் காந்திபோல தவறை ஸ்டாலின் உணர்வாரா? – அன்புமணி கேள்வி.!ராகுல் காந்திபோல தவறை ஸ்டாலின் உணர்வாரா? – அன்புமணி கேள்வி.!

ராகுல் காந்திபோல தவறை ஸ்டாலின் உணர்வாரா? – அன்புமணி கேள்வி.!

சென்னை : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது விமர்சனம்…

1 hour ago

தமிழகம் வரும் பிரதமர் மோடி.., முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை மனு.!

சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்தினார். முதல்வர் ஸ்டாலின்…

2 hours ago

தாய்லாந்து – கம்போடியா இடையே முற்றும் மோதல்.., இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு.!

பாங்காக் :  தாய்லாந்து - கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது, அவ்வப்போது மோதலும் நடந்து…

2 hours ago

மருத்துவமனையில் இருந்தவாறே மீண்டும் அலுவல் பணியை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் லேசான தலைச்சுற்றல் காரணமாக அனுமதிக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் 6-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.…

3 hours ago