நீட் தேர்வை ஏற்க முடியாது, தமிழகத்திற்கு விலக்கு தேவை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் திட்டவட்டம்.
தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில சுகாதரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் அதிகாரிகள் சிலர் நீட் தேர்வு தொடர்பாக காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார்கள். இதில் தமிழக அரசு சார்பில் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு, மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை செயலாளர் சாந்தி மலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என்றும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குத் அளிக்க வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினார். மேலும், தமிழக அரசு ஏற்கனவே செயல்படுத்தி வரும் இட ஒதுக்கீட்டை தொடர்ந்து கடைபிடிப்போம் என்றும், பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வாய்ப்பு இல்லை என்றும், இதுகுறித்த தெளிவான எழுத்துப்பூர்வமான அறிக்கையை ஒரு வாரத்தில் மத்திய அரசுக்கு அனுப்பி வைப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…