மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு முறை அண்மையில் கொண்டு வரப்பட்டது.இந்தியா முழுவதும் உலா மாணவர்கள் இந்த தேர்வினை கடும் கட்டுபாடுகளுடன் எழுதினர். இந்த தேர்விற்கான முடிவுகள் வெளியாகியது.
இந்நிலையில் நீட் தேர்வு மருத்துவ படிப்பிற்கு பதிலாக மரணத்தையே மாணவர்களுக்கு கொடுத்து வருகிறது.திருப்பூரை சேர்ந்த ரிதுஸ்ரீ என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்த நிலையில் அடுத்து மேலும் ஒரு மாணவியும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதே போல் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த வைஷியா என்ற மாணவி தனது வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலும் ஒரு மாணவி தற்கொலை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் அருகே கூனிமேடு குப்பத்தைச் சேர்ந்த மாணவி தான் மோனிஷா (18) நீட் தேர்வில் தோல்வி அடைந்துள்ளார்.இந்நிலையில் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை என்றுமே பிரச்சனைகளுக்கு முடிவாகாது என்ற மனநிலை மாணவர்களிடம் இன்றைய காலத்தில் ஏற்படுவது குறைந்து காணப்படுகிறது.மேலும் மாணவ,மாணவிகளிடம் இன்றைய கல்வி முறை தன்னபிக்கையை ஏற்படுத்த தவறுகிறதா..? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…