நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளனர்.
மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் தான் தமிநாட்டுக்குள் நீட் தேர்வு நுழைந்தது. அதிமுக ஆட்சியில் தான் அரசு பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி தொடங்கப்பட்டது. மேலும், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகள் நடைபெறாமல் இருப்பதற்கான முதல்படியாக நீதியரசர் எ.கே.ராஜன் தலைமையிலான குழு ஒன்றையும் அமைத்துள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும், நீட் தேர்வு ரத்து தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் மனு அளித்துள்ளார். நிச்சயம் நீட்டுக்கு விலக்கு கிடைக்கும். நீட் தேர்வு இப்போது தான் வந்தது போல ஓபிஎஸ் பேசுகிறார் என விமர்சித்துள்ளார். நீட் தேர்வை கொண்டு வந்தது யார்? மாணவ சமூகத்தை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது யார்? மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது யார்? என்பது தமிழக மக்களுக்கு தெரியும். அவர் ஏன் அப்படி ஒரு அறிக்கை வெளியிட்டார் என தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…