காரைக்குடியில் புதிதாக அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும் – அமைச்சர் ரகுபதி அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

உயர் நீதிமன்ற கிளையில் வழக்கறிகர்களுக்கான கூடுதல் வளாக கட்டடம் ரூ.4.25 கோடியில் கட்டப்படும் என்று அமைச்சர் ரகுபதி அறிவிப்பு.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிதாக அரசு சட்ட கல்லூரி அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார். ஐந்தாண்டு, மூன்றாண்டு படிப்புகளில் தலா 80 பேருடன் 2022-23ஆம் கல்வியாண்டில் தொடங்கப்படும் என்றும் திருவண்ணாமலை போளூரிலும், புதுக்கோட்டை திருமயத்திலும் தலா ஒரு சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் கள்ளக்குறிச்சி, தென்காசி, காஞ்சிபுரம் மற்றும் திருப்பத்தூரில் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்படும். உயர் நீதிமன்ற கிளையில் வழக்கறிகர்களுக்கான கூடுதல் வளாக கட்டடம் ரூ.4.25 கோடி செலவில் கட்டப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.

இதனிடையே மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர உச்சநீதிமன்றத்தையும், மத்திய அரசையும் தமிழக அரசு திரும்ப திரும்ப வலியுறுத்தும் என்றும் காவல் நிலைய சிறை வைப்பு அறைகளில் மனித உரிமை மீறல் இல்லை என்பதை உறுதி செய்ய நன்னடத்தை அலுவலர்களுக்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

6 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

7 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

7 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

8 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

10 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

11 hours ago