மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்களுக்கு புதிய காப்பீடு திட்டம் அமல் – தமிழக அரசு

Published by
பாலா கலியமூர்த்தி

மின்வாரிய ஊழியர்கள் உள்பட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் புதிய காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படுகிறது என தமிழக அரசு அறிவிப்பு.

மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் புதிய காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, பிற அரசுத்துறை ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், மின்வாரிய ஊழியர்களுக்கும் அறிவித்துள்ளனர்.

அதன்படி, ஜூன் 30, 2025ம் ஆண்டு வரை புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அமலில் இருக்கும் என்றும் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்திற்காக மின்வாரிய ஊழியர்களிடம் மாதம் ரூ.300 பிடித்தம் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. மேலும், இந்த புதிய காப்பீடு திட்டத்துக்காக தமிழக அரசு, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியுடன் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்படி, மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும் 1,169 மருத்துவமனைகளில், 203 வகையான சிகிச்சைகளை பெறலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும், அரிய வகை சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் தேவைப்படுவோர் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீட்டு தொகை மூலம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

1 minute ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

54 minutes ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

1 hour ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

3 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

4 hours ago

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…

5 hours ago