நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் – குடியரசு தலைவர் ஒப்புதல் பெற நடவடிக்கை!

Published by
பாலா கலியமூர்த்தி

நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்.

தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை கொள்கை விளக்க குறிப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில், நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றி, குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி ஓய்வுபெற்ற ஏகே ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவானது ஜூன் மாதம் 17ம் தேதி தமிழக அரசிடம் ஆய்வு நடத்திய அறிக்கையை சமர்ப்பித்து இருந்தது.

இதனிடையே உயர்மட்ட குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து, இதனை செயல்படும் பொருட்டில் தலைமை செயலாளர் தலைமையில் உயர் அலுவலர்கள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழு மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை எப்படி புரிந்துகொள்வது, புதிய சட்டத்தை இயற்றி, குடியரசு தலைவர் ஒப்புதல் பெற முயற்சிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசால் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

38 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

1 hour ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

2 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

10 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago