புதிய கால்நடை மருந்தகம் – நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • புதிய கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்துவமனைகள் மேம்பாடு ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்து கால்நடை பராமரிப்புத்துறை அரசாணை அறிவித்துள்ளது.
  • சுமார் 5000 கால்நடைகளுக்கு மேல் உள்ள 25 கிராம பஞ்சாயத்துகளில், புதிய கால்நடை மருந்தகங்கள் அமைக்க ரூ.3 கோடியே 50 லட்ச நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகங்களில் கூடுதல் வசதி இல்லாததாலும், குறைவான எண்ணிக்கையில் இருப்பதாலும், அதனால் சீரமைக்கும் பணி மற்றும் புதிய கால்நடை மருந்தகங்கள், ஏற்கனவே உள்ள கால்நடை மருந்தகங்களின் தரம் உயர்த்த, மேலும் கால்நடை மருத்துவமனைகள் மேம்பாடு ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்து கால்நடை பராமரிப்புத்துறை அரசாணை அறிவித்துள்ளது.

அதாவது, கால்நடை பராமரிப்புத்துறை அரசாணை அறிவிப்பில், கோவை, கடலூர், தருமபுரி, ஈரோடு, கரூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் சுமார் 5000 கால்நடைகளுக்கு மேல் உள்ள 25 கிராம பஞ்சாயத்துகளில், புதிய கால்நடை மருந்தகங்கள் அமைக்க ரூ.3 கோடியே 50 லட்ச நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 5 கால்நடை மருந்தகங்கள் தலா ரூ.50 லட்ச வீதம், ரூ.2 கோடியே 50 லட்ச மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனைகளாக கூடுதல் தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி செட்டிபாளையம், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள 2 கால்நடை மருத்துவமனைகள், ரூ.2 கோடியே 40 லட்ச செலவில் 24 மணி நேரமும் இயங்கும் பன்முக மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

9 minutes ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

43 minutes ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

1 hour ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

2 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

3 hours ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

3 hours ago