கடலூரில் கணவர் வீட்டில் கழிவறை இல்லாததால் தற்கொலை செய்து கொண்ட புதுமணப்பெண்.
கடலூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும், அரிசி பெரியாங்குப்பத்தை சேர்ந்த ரம்யா என்பவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இரு வீட்டார் ஒப்புதலுடன் கடந்த மாதம் ஆறாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் திருமணத்திற்கு பின் கணவர் வீட்டிற்கு சென்ற ரம்யாவுக்கு அங்கு கழிவறை இல்லாதது குறையாக இருந்த நிலையில், கழிவறை இருக்கும் வீட்டை ரம்யா தனது கணவரிடம் அறிவுறுத்தி பார்க்குமாறு புதுமணத் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரம்யா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனையடுத்து மயக்கமுற்ற நிலையில் ரம்யாவை மீட்ட குடும்பத்தினர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ரம்யாவின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து, காவல்துறையினர் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…