போலி பாஸ்போர்ட் விவகாரம்.? மதுரையில் NIA அதிகாரிகள் தீவிர சோதனை.!

Published by
மணிகண்டன்

சமீப காலமாகவே தீவிரவாத கண்காணிப்புகள் குறித்து வழக்குகளை விசாரணை செய்யும் தேசிய புலனாய்வு அமைப்பான NIA இந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக கோவை குக்கர் வெடிப்பை அடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இந்த சோதனை தீவிர படுத்தப்பட்டது.

தற்போது NIA சோதனையானது மதுரையில் அதிகாலை நிலையை தொடங்கியுள்ளது. மதுரை காவல்துறையினர் பாதுகாப்பில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே பெரிய பள்ளிவாசல் அமைந்துள்ள காஜிமார் தெருவில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

காஜிமார் தெருவில் வசித்து வந்த முகமது தாஜித் என்பவர் வீட்டில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இவர் போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பான வழக்கில் தொடர்புடையவர் என்றும், பல மாதங்களாக இவர் தலைமறைவாக இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முகமது தாஜீக் வீடு மட்டுமின்றி அவரது சகோதரர் உஸ்மான் வீட்டிலும் இந்த சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. லக்னோ மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Published by
மணிகண்டன்
Tags: #Madurai#NIA

Recent Posts

அண்ணா பெயரை உச்சரிக்க திமுகவுக்கு அருகதை இருக்கிறதா? – இபிஎஸ் கேள்வி

சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…

18 minutes ago

கருப்புபெட்டி தரவுகள் மீட்பு! விரைவில் விமான விபத்துக்கான காரணம்!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

1 hour ago

விஜய் இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? திருமாவளவன் கேள்வி!

சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…

2 hours ago

தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஷாக்? பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…

2 hours ago

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

3 hours ago

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

4 hours ago