Punishment detail for Nirmala Devi [file image]
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வந்த பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருடன் உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டனர்.
இதன்பின் அந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். இது வழக்கு சுமார் ஆறு ஆண்டுகளாக விருதுநகர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.
மேலும், உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகிய இருவருக்கு எதிராக போதுமான ஆதாரம் இல்லாததால் வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே நிர்மலா தேவி குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், தண்டனை விவரங்கள் இன்று வெளியாகும் என கூறப்பட்டது.
இந்த நிலையில் மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் நிர்மலா தேவிக்கான தண்டனையை அறிவித்தார். மேலும் ஏற்கனவே சிறையில் இருந்த காலங்களை தவிர்த்து மீதி நாட்கள் சிறையில் இருப்பார் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் : கடந்த ஜூன் 13ம் தேதி டெல்டா பாசனத்துக்காகமேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணையை வழக்கமாகத் திறக்கும் தேதி…
சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த குந்தமாலாவில் பிரசித்தி பெற்ற இந்திரயாணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமை வாய்ந்த ஆற்றுப்பாலத்திற்கு…
சென்னை : சென்னையில் உள்ள அண்ணா நகரில் பார்க்கிங் பிரச்சினையாக மாறி வரும் நிலையில், அதற்கு தீர்வு காண ஸ்மார்ட்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மூன்றாவது நாளாக மோதல் தொடர்கிறது. இதில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ட்ரோன் தாக்குதல்களை…
குஜராத் : அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்ட 241 பயணிகளில் ஒருவரான குஜராத் முன்னாள் முதல்வர்…