சென்னையில் 10 நிமிட உணவு டெலிவரி திட்டம் அறிமுகப்படுத்தப்படாது என சென்னை காவல் துறையிடம் சொமேட்டோ விளக்கம் அளித்துள்ளது.
பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ வாடிக்கையாளர்கள் உணவு ஆர்டர் செய்த 10 நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு கடுமையாக விமர்சனம் எழுந்தது. இந்த அறிவிப்பால் குறைந்த நேரத்தில் உணவு வழங்க வேண்டும் என்பதற்காக சாலை விபத்துகள் அதிகரிக்கக் கூடும் என்றும் உணவு விநியோகம் செய்யும் நபர்கள் போக்குவரத்து விதிகளை மீறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக பலர் விமர்சனம் செய்தனர்.
10 நிமிடத்தில் டெலிவரி திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்து முழுமையான விளக்கம் கேட்கப்படுமென சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 10 நிமிட உணவு டெலிவரி திட்டம் சென்னையில் அறிமுகப்படுத்தப்படாது என சொமேட்டோ அறிவித்துள்ளது. சொமேட்டோ இந்த திட்டத்தை அறிமுகம் செய்ய நினைத்தால் சென்னை நகர காவல்துறையின் முன் அறிவுறுத்தல் மற்றும் ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்படும் என சொமேட்டோ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…