டிராக்டர் ட்ரைலருக்கு ஒப்புதல் அவசியமில்லை – உயர்நீதிமன்றம்!

Published by
Rebekal

டிராக்டர் ட்ரைலருக்கு ஒப்புதல் அவசியமில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விவசாய பயன்பாட்டிற்க்கான டிராக்டர் உற்பத்தி செய்யும் ஈரோட்டை சேர்ந்த சக்தி விநாயகா இன்ஜினியரிங் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மத்திய மோட்டார் வாகன திருத்த விதிகளில் ட்ராக்டர் ட்ரைலரை மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்து ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் அவ்வாறு பதிவு செய்வதற்காக விண்ணப்பித்த போது அந்த இணையதளத்தில் எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும், இந்த நடைமுறை தமிழகம் தவிர பிற மாநிலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழகத்தில் விவசாயிகள் வாங்கும் டிராக்டரை இணையதளத்தில் பதிவு செய்து ஒப்புதல் பெற வேண்டும் என கட்டாயப்படுத்தாமல், ஆர்.டி.ஓ அலுவலகங்களில் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிபதி ஆர் சுரேஷ் குமார் அவர்கள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் இணையதளத்தில் ஒப்புதல் பெறாமல் வாகனத்தை பதிவு செய்ய முடியாது எனவும், ஒப்புதல் பெறுவதற்காக பதிவு செய்யும்படி ட்ரைலர் இல்லாமல் பதிவு செய்யும்படி கூற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பின் வாதத்தையும் கேட்ட நீதிபதி மோட்டார் வாகனங்களில் பதிவு அவசியம், ஆனால் ட்ரைலரை மோட்டார் வாகனமாக கருத முடியாது எனக் கூறி, ட்ரைலர் இணையதளத்தில் பதிவு செய்து ஒப்புதல் பெற தேவையில்லை எனவும், மத்திய அரசின் இணையத்தில் இனி பதிவு செய்து ஒப்புதல் பெறாமல் பதிவு செய்ய போக்குவரத்துத் துறைக்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

29 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

2 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

2 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago