மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேடு மசோதா ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்கள் வடமாநிலங்களில் தீவிரமாக நடைபெற்றது. தென் மாநிலங்களிலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று பெசன்ட் நகர் சாலையில் தேசிய குடியுரிமை சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேடு மசோதாவிற்கு எதிராக தங்களது எதிர்ப்பை காட்டும் வகையில் சாலையில் கோலம் போட்டு போராட்டம் செய்தனர். அதனால் கோலம் போட்ட பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தி அழைத்துச்சென்று பின்னர் விடுவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக எம்.பி கனிமொழி. தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த சம்பவத்திற்க்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து வந்தார். தற்போது, ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டு வாசல், மற்றும் கோபாலபுரத்தில் இருக்கும் மறைந்த முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதி ஆகியோர் வீட்டில் குடிமக்கள் பதிவேடு எதிராகவும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும்கோலம் போடப்பட்டுள்ளது அந்த கோலத்தில் வேண்டாம் CAA, NRC என எழுதப்பட்டுள்ளது.
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…
மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…
தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…