தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்த தற்போது வாய்ப்பில்லை என்று அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் தகவல்.
நாட்டில் மற்ற மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்த பட்ட போதிலும், தமிழ்நாட்டில் உயர்த்தப்படவில்லை, அதற்கு தற்போதைக்கு வாய்ப்பில்லை என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் தெரிவித்துள்ளார். எலக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பாக வழிகாட்டுதலை உருவாக்க அரசு ஆலோசனை செய்து வருகிறது. போக்குவரத்துத்துறைக்கு தனி கட்டுப்பாட்டு அறை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வுகாண தமிழக சட்டமன்ற கூட்டத்திற்கு பின் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் சென்னையில் 2000 அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சகர் இருந்த எஸ்எஸ் சிவசங்கர், சமீபத்தில் தான் போக்குவரத்து அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…