இதுவரை எந்த அதிபரும் இவ்வளவு தூரம் சாலையில் சென்றது கிடையாது என்று சென்னை காவல் இணை ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்திப்பு நடைபெற்றது.இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நேற்றுடன் நிறைவடைந்தது.இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இது குறித்து சென்னை காவல் இணை ஆணையர் சுதாகர் பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து ஒரு மாத காலமாக பயிற்சி மேற்கொண்டோம் . இதுவரை எந்த அதிபரும் இவ்வளவு தூரம் சாலையில் சென்றது கிடையாது.சீனஅதிபரின் வருகையையொட்டி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களையும் கண்காணித்தோம்.
சாலைகளில் மின் கம்பம், குப்பை தொட்டி உள்ளிட்ட அனைத்திலும் சோதனை நடத்தப்பட்டது .110-க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் ஒரு மாத காலமாக 35 கிலோ மீட்டர் வரை சோதனை மேற்கொண்டனர்.
35 கிலோ மீட்டருக்கு ஒவ்வொரு வீடுகளிளும் சோதனை நடத்தப்பட்டது.பொதுமக்கள் எங்களுக்கு மிகுந்த ஆதரவளித்தனர்.அதிபர் செல்லும் அனைத்து இடங்களிலும் ட்ரோன் மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டது என்று இணை ஆணையர் சுதாகர் தெரிவித்தார்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…