காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் இன்று அவரச ஆலோசனை நடத்துகிறார்.
புதுச்சேரியில் 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமாவை தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதிய துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசை சவுந்தரராஜன், நாளை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் நாராயணசாமிக்கு உத்தரவிட்டிருந்தார். நாளை மாலை 5 மணிக்குள் வாக்கெடுப்பை நிறைவு செய்யவும், முழு நிகழ்வையும் வீடியோ பதிவு செய்யவும் ஆளுநர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி இன்று அவரச ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் நாளை நடைபெறவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதனிடையே, அனைத்து சட்டமன்ற உறுப்பினருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி என இரு கட்சிகளுக்கும் தலா 14 சட்டசபை உறுப்பினர்களை சமபலமாக கொண்டுள்ளது. மேலும் நியமன எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு வாக்களிப்போம் என்றும் கூறிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது. இதனிடையே, புதுச்சேரி அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் தலைமை அழைப்பு காரணமாக தற்போது சென்னை சென்றுள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…