ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கிய அனுமதி நீட்டிக்கும் அவசியம் இல்லை – கே.பாலகிருஷ்ணன்

Published by
லீனா

ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கிய அனுமதி நீட்டிக்கும் அவசியம் இல்லை என கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் இரண்டாவது  அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த காலகட்டங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஆக்சிஜன் தட்டுப்பாடுகளை போக்க பல்வேறு தனியார் அமைப்புகள்  ஆக்சிஜன் உற்பத்தி செய்து வழங்கி வந்தது.

ஸ்டெர்லைட் ஆலை 

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஆக்சிஜனை உற்பத்தி செய்து இலவசமாக தர தயாராக இருப்பதாகவும் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியது. இதனையடுத்து. உச்ச நீதிமன்றம் ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு ஆக்சன் தயாரிப்புக்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளித்தது. மேலும் இந்த ஆக்சிஜன் தயாரிப்பை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.

ஆக்சிஜன் உற்பத்தி 

கடந்த மே 5-ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டது. இந்த ஆலை மூலம் இதுவரை சுமார் 650 டன் மருத்துவ பயன்பாட்டிற்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு பல மாநிலங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் 350 டன் வாயு நிலையிலான  ஆக்சிஜன் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

முடிவடையும் கால அவகாசம் 

 வரும் ஜூலை 31-ஆம் தேதியுடன் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு  உச்சநீதிமன்றம் அளித்துள்ள அனுமதி முடிவடைகிறது. இதனைத்தொடர்ந்து வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்திக்காக மேலும் 6 மாதங்கள் அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

ஆக்சிஜன் உற்பத்தியை காரணம் காட்டி கால அவகாசம் கேட்டால் அனுமதி அளிக்கக்கூடாது என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர், பேரணியாக சென்று சில நாட்களுக்கு முன்பதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கே.பாலகிருஷ்ணன் 

இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பிற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டது. அப்போது 230 மெட்ரிக் டன் மட்டுமே தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி இருந்தது. இப்போது ஆக்சிஜன் தயாரிப்பு 650 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கிய அனுமதி நீட்டிக்கும் அவசியம் இல்லை. னவே, அந்த ஆலையை பூட்டி சீல் வைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு வலியுறுத்துகிறது.’ என பதிவிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

2 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

3 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

4 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

4 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

4 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

6 hours ago