எனது பிறந்தநாளன்று யாரும் என்னை நேரில் சந்திக்க வரவேண்டாம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் வரும் 25-ம் தேதி பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், பிறந்தநாளன்று யாரும் தன்னை நேரில் சந்திக்க வரவேண்டாம் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வருகின்ற ஆகஸ்ட் 25ம் தேதி அன்று எனது பிறந்த நாளை முன்னிட்டு, கழகத் தோழர்கள், நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சி நண்பர்கள் உள்பட யாரும் என்னை நேரில் சந்திக்க வரவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் சீரிய முயற்சியால் கொரோனா நோய் தற்போது தமிழ்நாட்டில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகவே தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கொரோனா நடைமுறைகளை பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
மேலும் என்னை வாழ்த்தி டிஜிட்டல் பேனர்கள், சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், விளம்பரம் செய்வதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…