தமிழக அரசை குறை சொல்ல எந்த கட்சிக்கும் அருகதை கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.
சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், தமிழக அரசை குறை சொல்ல எந்த கட்சிக்கும் அருகதை கிடையாது. 7 பேர் விடுதலையில் முதலில் முயற்சி எடுத்தது ஜெயலலிதா தான். ஆனால் இன்று நீலி கண்ணீர் வடிப்பவர்கள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆளுனர் இதுகுறித்து நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன்.
முதல்வர் வெளிநாட்டு பயணம் குறித்து ஸ்டாலின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் கூறுகையில் ,ஸ்டாலின் முதலில் அவர் பணியை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். முதல்வர் நல்ல முதலீட்டுடன் திரும்பி வருவார். ஆனால் இங்குள்ள எதிர்க்கட்சி தலைவர் பொறாமையுடன் இதுகுறித்து பேசி வருகிறார்.
ஒரு பெண்மணியாக இருக்கின்ற தமிழிசை சௌந்தரராஜன், தெலுங்கானாவின் முதல் கவர்னர் மற்றும் பெண் கவர்னராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தமிழ் மொழியில் தீர்ப்பு மொழிமாற்றம் செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…