விஜயகாந்த் இறுதிச் சடங்கில் பொது மக்களுக்கு அனுமதியில்லை – போலீஸ் அறிவிப்பு.!

Published by
கெளதம்

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நேற்று காலை நிமோனியா காரணமாக உயிரிழந்தார். தற்போது, மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவருடைய உடல் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கானோர் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்னும் சற்றுநேரத்தில் தீவு திடலில் இருந்து தேமுதிக அலுவலகத்திற்கு ஊர்வலமாக செல்லும் கேப்டன் விஜயகாந்தின் உடல், மாலை 4 மணிக்கு மேல் அடக்கம் செய்யப்படவுள்ளது. இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அவரது இறுதி சடங்கை காண பெரிய எல்.ஈ.டி. திரைகள் ஆங்காங்கே வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆம், தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை விஜயகாந்த் உடல் 72 துப்பாகி குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், தேமுதிக அலுவலகம் காவல்துறையின் 3 அடுக்கு பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. விஜயகாந்த் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அனுமதிச்சீட்டு வழங்கப்பட்ட குடும்ப உறுப்பினர்ள் உட்பட 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கேப்டன் விஜயகாந்த் இறுதி ஊர்வலம் செல்லும் பாதை.!

இதனால், தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும், தேமுதிக அலுவலகம் அருகே கூடியிருக்கும் பொதுமக்கள் கலைந்து செல்லுமாறு காவல்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் மற்றும் அசம்பாவிதங்களை தவிர்க்க அங்கு பாதுகாப்பு பணியில் 3,000 போலீசார் உள்ளனர். அதேபோல், தேமுதிக அலுவலகத்தில் 2,000 போலீசார் பாதுகாப்பில் உள்ளனர்.

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

3 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

3 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

3 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

4 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

4 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

5 hours ago