விஜயகாந்த் இறுதிச் சடங்கில் பொது மக்களுக்கு அனுமதியில்லை – போலீஸ் அறிவிப்பு.!

Published by
கெளதம்

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நேற்று காலை நிமோனியா காரணமாக உயிரிழந்தார். தற்போது, மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவருடைய உடல் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கானோர் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்னும் சற்றுநேரத்தில் தீவு திடலில் இருந்து தேமுதிக அலுவலகத்திற்கு ஊர்வலமாக செல்லும் கேப்டன் விஜயகாந்தின் உடல், மாலை 4 மணிக்கு மேல் அடக்கம் செய்யப்படவுள்ளது. இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அவரது இறுதி சடங்கை காண பெரிய எல்.ஈ.டி. திரைகள் ஆங்காங்கே வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆம், தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை விஜயகாந்த் உடல் 72 துப்பாகி குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், தேமுதிக அலுவலகம் காவல்துறையின் 3 அடுக்கு பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. விஜயகாந்த் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அனுமதிச்சீட்டு வழங்கப்பட்ட குடும்ப உறுப்பினர்ள் உட்பட 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கேப்டன் விஜயகாந்த் இறுதி ஊர்வலம் செல்லும் பாதை.!

இதனால், தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும், தேமுதிக அலுவலகம் அருகே கூடியிருக்கும் பொதுமக்கள் கலைந்து செல்லுமாறு காவல்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் மற்றும் அசம்பாவிதங்களை தவிர்க்க அங்கு பாதுகாப்பு பணியில் 3,000 போலீசார் உள்ளனர். அதேபோல், தேமுதிக அலுவலகத்தில் 2,000 போலீசார் பாதுகாப்பில் உள்ளனர்.

Recent Posts

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

6 hours ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

8 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

11 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

12 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

12 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

15 hours ago