சமீபத்தில் தமிழக பாஜக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் பாஜக திட்டமிட்டு நடத்திக்கொண்டிருக்கும் வேல் யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது . இந்த வழக்கை நீதிபதிகள் இன்று ஒத்திவைத்தனர்.
எத்தனை பேர் கலந்து கொள்ள போகிறார்கள் எத்தனை வாகனங்களில் சொல்ல போகிறார்கள் என்ற அறிக்கையை டிஜிபியிடம் மனு தாக்கல் செய்ய பாஜக தரப்பிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, டிஜிபி சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், பாஜகவின் வேல் யாத்திரை பக்தி யாத்திரை அல்ல. முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை, பாஜகவினர் அத்துமீறி நடந்து கொண்டனர். கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாஜக தனிமனித இடைவெளி போன்றவற்றை பின்பற்றுவதில்லை, 10 வாகனங்களில் 30 பேர் மட்டுமே செல்வோம் என நீதிமன்றத்தில் கூறியதை பாஜகவினர் பின்பற்றவில்லை. பாஜக நீதிமன்றத்தில் சொல்வது ஒன்று கடைப்பிடிப்பது வேறொன்றாக உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தவறான செயலை நியாயப்படுத்தாதீர்க்கள் என பாஜக தரப்புக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். பாஜகவின் வேல் யாத்திரையால் மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் ஊடகங்களில் பார்த்தோம் என தெரிவித்தனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…