‘சோதனைக்கு ஒத்துழைக்கவில்லை’ – அமைச்சர் கடம்பூர் ராஜு மீது வழக்கு பதிவு…!

Published by
லீனா

தேர்தல் பறக்கும் படை அதிகாரியின் சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால், அமைச்சர் கடம்பூர் ராஜு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக உள்ள கடம்பூர் ராஜு அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் இந்த சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் அனைத்து   வாகனங்களையும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்ற நிலையில், கடம்பூர் ராஜு மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்ற காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரி மாரிமுத்து, கடந்த 2-ஆம் தேதி வழிமறித்து சோதனை செய்துள்ளார்.

மேலும் மீண்டும் இன்னொரு முறையும் காரை தேர்தல் அதிகாரிகள் மாரிமுத்து  மேற்கொண்டதையடுத்து,  இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு திட்டமிட்டு தங்களை சோதனை செய்வதாக புகார் தெரிவித்தார். தேர்தல் அதிகாரி மாரிமுத்துவும் காவல்நிலையத்தில் என்னுடைய சோதனைக்கு இடம் தரவில்லை என்றும், முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து தற்போது அமைச்சர் கடம்பூர் ராஜு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சோதனை செய்த அதிகாரி மாரிமுத்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Published by
லீனா

Recent Posts

அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…

4 hours ago

கேரள கன்னியாஸ்திரிகள் மீது ஆள்கடத்தல், கட்டாய மதமாற்ற வழக்குப்பதிவு – மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…

5 hours ago

நாய்-க்கு இருப்பிடச் சான்றிதழ்.., வினோத சம்பவத்தால் பீகாரில் எழுந்தது சர்ச்சை.!

பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…

5 hours ago

நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலையில் கைதான இளைஞரின் புகைப்படம் வெளியீடு.!

நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…

6 hours ago

“சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்” – கண்ணீர் மல்க சூளுரைத்த ராஜேந்திர பாலாஜி.!

சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…

6 hours ago

பாஜக, திமுக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் – விஜய் அறிக்கை.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…

7 hours ago