தேர்தல் பறக்கும் படை அதிகாரியின் சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால், அமைச்சர் கடம்பூர் ராஜு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக உள்ள கடம்பூர் ராஜு அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் இந்த சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் அனைத்து வாகனங்களையும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்ற நிலையில், கடம்பூர் ராஜு மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்ற காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரி மாரிமுத்து, கடந்த 2-ஆம் தேதி வழிமறித்து சோதனை செய்துள்ளார்.
மேலும் மீண்டும் இன்னொரு முறையும் காரை தேர்தல் அதிகாரிகள் மாரிமுத்து மேற்கொண்டதையடுத்து, இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு திட்டமிட்டு தங்களை சோதனை செய்வதாக புகார் தெரிவித்தார். தேர்தல் அதிகாரி மாரிமுத்துவும் காவல்நிலையத்தில் என்னுடைய சோதனைக்கு இடம் தரவில்லை என்றும், முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து தற்போது அமைச்சர் கடம்பூர் ராஜு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சோதனை செய்த அதிகாரி மாரிமுத்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…