திமுக ஆட்சியின் போது தமிழக மக்களுக்கு எதும் செய்யப்படவில்லை – முதல்வர் பழனிசாமி

Published by
பாலா கலியமூர்த்தி

மக்களுக்கு தேவையான பல திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது என்று முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார். 

திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளான இன்று உடுமலைபேட்டையில் மக்கள் மத்தியில் பேசிய முதல்வர் பழனிசாமி, அதிமுக அரசு எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்றும் மக்களுக்கு எதும் செய்யவில்லை எனவும் முக ஸ்டாலின் குற்றசாட்டுகிறார் என்று முதல்வர் கூறியுள்ளார். அவர்கள் தெரிந்து பேசுகிறார்களா தெரியாமா பேசுகிறார்கள் என்று கூறிய முதல்வர், மக்களுக்கு தேவையான பல திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக அரசின் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறிய முதல்வர், கனிமொழி எம்பி திருப்பூர் மாவட்டத்தில் போகும் இடமெல்லாம் தவறான பொய்யான செய்தியை பரப்பி வருகிறார் என குற்றசாட்டினார். ஒரு விவசாயி முதல்வராக இருக்கக்கூடியது அதிமுக அரசு என்றும் வேளாண்குடி சிறந்ததால் உணவு உற்பத்தி அதிகரிக்கும், அப்போதுதான் உணவிற்கு பஞ்சமில்லாமல் இருக்க முடியும் என தெரிவித்துள்ளார். ஆகையால், எங்கள் அரசு பல்வேறு உதவிகளை விவசாயிகளுக்கு செய்து வருகிறது,

மேலும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளது. உழைக்கும் விவசாயிகள், மக்களுக்கான அரசு அதிமுக தான் என்று கூறியுள்ளார். பாஜக மத்தியில் ஆளுகிறது தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையையும் கிடைக்கவில்லை என்பது ஒரு தவறான குற்றசாட்டு என்றும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து திருப்பூரில் அரசு மருத்துவ கல்லூரி கொண்டுவரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை, அதிமுக அரசு தமிழ்நாட்டுக்கு என்ன தேவை என்று மத்தியில் எடுத்து சொல்லி பல்வேறு திட்டங்களை எடுத்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒரே ஆண்டி 11 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை கொண்டு வந்த வரலாற்று பெற்ற அரசு அதிமுக தான் என்றும் மக்களின் குறைகளை தெரிவிக்க 1100 என்ற எண்ணை அழைத்து அரசின் சேவையை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பால் வேண்டும், மோர் வேண்டும் ஆனா… “கால்நடை மனநிலை” பற்றி சீமான் பேச்சு!

பால் வேண்டும், மோர் வேண்டும் ஆனா… “கால்நடை மனநிலை” பற்றி சீமான் பேச்சு!

மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…

11 minutes ago

ரொம்ப பேசுது அபராதம் போடணும்! Grok மீது போலாந்து அமைச்சர் புகார்!

வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…

40 minutes ago

INDvsENG : “ஆரம்பே அமர்க்களம்”..இங்கிலாந்தை திணற வைத்த நிதிஷ் குமார் ரெட்டி!

லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…

2 hours ago

அதிமுக – பா.ஜ.க. கூட்டணியால் முதல்வருக்கு காய்ச்சல்! நயினார் நாகேந்திரன் பதிலடி!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…

3 hours ago

ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…

3 hours ago

எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் மாதிரி விஜய் அரசியல் செய்யணும்- ரோஜா அட்வைஸ்!

திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…

4 hours ago