சென்னை மெட்ரோ ரயில் நிர்வனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகளின் கோரிக்கை கருத்தில்கொண்டு திங்கள் முதல் சனிக்கிழமை வரை உச்ச நேரங்களில் ( peak hours) 7 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை ஐந்து நிமிட இடைவெளியில் இயக்க முடிவு செய்துள்ளது.
எனவே இன்று முதல் மெட்ரோ ரயில் சேவைகள் உச்ச நேரங்களில் (peak hours) காலை 8 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 7 மணி வரை ஐந்து நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் காலை 5. 30 மணி முதல் 8 மணி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும்.
சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இரவு 10 மணி முதல் இரவு 11 மணிவரை 28 நிமிடங்களுக்கு பதிலாக 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவைகள் நாள் முழுவதும் உச்ச மணி நேரம் இல்லாமல் (non- peak hours) 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
அதற்கேற்ப பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…