நீதிமன்ற உத்தரவையும் தாண்டி ஆவின் தலைவராக பொறுப்பேற்ற ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா

Published by
Venu

எந்த வித முன்னறிவிப்பும் இன்றி ஓ.ராஜா மற்றும் 17 பேர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு  சங்கத்தில் தேர்வு செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில்,தேனி மாவட்ட ஆவின் தலைவராக நியமிக்கப்பட்ட ராஜா உள்ளிட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் 17 பேர் நியமனம் ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இந்நிலையில் இன்று ஓ.ராஜா தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு  சங்க தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அமாவாசை என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி ஓ.ராஜா மற்றும் 17 பேர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு  சங்கத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு  சங்க தலைவராக செயல்பட துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம்  சகோதரர் ஓ.ராஜா செயல்பட  இடைக்காலதடை விதித்தது.மேலும் இவரது தலைமையிலான  இடைக்கால நிர்வாகக்குழு செயல்படவும் இடைக்கால  தடை  விதித்தது.இதன் பின்னர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு மீதான விசாரணை நடைபெற்றது.அப்பொழுது, தேனி மாவட்ட ஆவின் தலைவராக நியமிக்கப்பட்ட ராஜா உள்ளிட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் 17 பேர் நியமனம் ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.விதிப்படி தேர்தடுக்கப்படாததால் நியமனம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆவின் ஆணையர் விதிப்படி தற்காலிக மற்றும் நிரந்தர குழு அமைப்பது பற்றி முடிவு எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் புதிய விதிப்படி பழைய உறுப்பினர்கள் மீண்டும் பதவியேற்றுள்ளனர்.குறிப்பாக  துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம்  சகோதரர் ஓ.ராஜா தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு  சங்க தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.

Published by
Venu

Recent Posts

“பாமகவில் பிரச்னை செய்ய திமுகவிற்கு என்ன தேவை உள்ளது?” – செல்வப்பெருந்தகை பேச்சு!

“பாமகவில் பிரச்னை செய்ய திமுகவிற்கு என்ன தேவை உள்ளது?” – செல்வப்பெருந்தகை பேச்சு!

விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…

6 minutes ago

இனிமே இது தான் ரூல்ஸ்…சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டு வந்த ஐசிசி!

டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…

18 minutes ago

விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி! மத்திய அரசு எடுத்த முடிவு!

டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…

1 hour ago

“விலங்குகள் தாக்குவது இயல்பு”…அலட்சியமாக பதில் சொன்ன ராஜகண்ணப்பன்.. எழுந்த கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…

1 hour ago

”ரயில் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும்” – ரயில்வே துறை இணை அமைச்சர்.!

சென்னை : வரும் 1-ம் தேதியன்று ஏ.சி. மற்றும் ஏசி அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு…

2 hours ago

”கூமாப்பட்டி – பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும்” – விருதுநகர் ஆட்சியர் உறுதி.!

விருதுநகர் : ஊட்டி, கொடைக்கானல் என பிரபல சுற்றுலாத் தலங்களை எல்லாம் ஓரம்கட்டி விட்டுத் திடீரென கூமாபட்டி கிராமம் வலைத்தளங்களில்…

2 hours ago