ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக செயல்பட இடைக்கால தடை

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக செயல்பட துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜா செயல்பட உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலதடை விதித்துள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அமாவாசை என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி ஓ.ராஜா மற்றும் 16 பேர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக செயல்பட துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜா செயல்பட இடைக்காலதடை விதித்துள்ளது.மேலும் இவரது தலைமையிலான இடைக்கால நிர்வாகக்குழு செயல்படவும் இடைக்கால தடை விதித்துள்ளது.இது தொடர்பாக பால் உற்பத்தியாளர்,பால் உற்பத்தி மேல்நிலை பதிவாளர் உள்ளிட்ட 17 பேர் பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்து வழக்கின் விசாரணையை வருகின்ற 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025