MaduraiHC -TempleFunctions [Image Source :file image]
கோவில் திருவிழாக்களின்போது ஆபாச நடனம் ஏற்பாடு செய்தால் பெண் வன்கொடுமை தடை சட்டம் பாயும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.
கோயில் திருவிழாக்களில் ஆபாச நடன நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் விழா ஏற்பாட்டாளர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வன்கொடுமை செய்யும் அளவிற்கு நடனங்கள் இருக்கும்போது சாதாரண வழக்குகளை ஏற்க முடியாது என்று நீதிபதி கூறியுள்ளார். மேலும், வழிபாட்டு தலங்களில் ஆபாச நடனம் நடக்கும்போது போலீஸ் என்ன செய்து கொண்டிருந்தது என்றும் நீதிபதி கடுமையாக சாடியுள்ளார்.
ஏற்கனவே, கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனம் ஆடுவது குறித்து மதுரை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் குறவன் – குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதை அனுமதி அளிக்க கூடாது எனவும், அதனை தடுக்க தனி பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும், சாதி பாடல்களை ஒலிபரப்பவில்லை என்பதை அரசு உறுதி செய்யவேண்டும் எனவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…