ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி ! பசித்தவர்களுக்கு தாயாக விளக்கும் இட்லி கடை!

Published by
murugan

இன்றைய காலகட்டத்தில் விலை வாசிகள் அதிகரித்து உள்ள நிலையில்  அரியலூர்  மாவட்டத்தின் ஜெயம்கொண்டம் அருகே உள்ள இளையபெருமாள்நல்லூர் கிரமத்தில் உள்ள   ஒரு இட்லி கடையில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி விற்கப்படுகிறது.

இளையபெருமாள்நல்லூரில் காக்காபிள்ளை கடையென்றால் அந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரியும் அளவிற்கு இந்த இட்லி கடை பிரபலமடைந்து உள்ளது.ஏன் என்றால் இந்த இட்லி கடையில் காலையில் கூலி வேலைக்கு போகும் தொழிலாளர்கள் முதல் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும்  பொதுமக்கள் என அனைவரும் இந்த கடைக்கு வந்து விடுவார்கள்.

இந்த கடையை சிங்காரம்பிள்ளை , வள்ளி தம்பதி 1956-ம் ஆண்டு  அவர்கள் திருமணமான அடுத்த மூன்று நாள்களில் தொடங்கினர். இந்த கடையை தொடங்கும் போது 1 ரூபாய்க்கு 4 இட்லி  என விற்க தொடங்கினர்.

பின்னர் இவர்களது  பிள்ளைகள் 50 பைசாவிற்கு இட்லி விற்று தற்போது ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி என விற்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து அக்கடையின் உரிமையாளர் வள்ளி கூறுகையில் , நானும் எனது கணவரும் 4 மரக்கா வரை கையால்  இருவரும் அரிசி அரைத்து இட்லி விற்று வந்தோம்.

தற்போது தங்களின் மகன்கள் இந்த இட்லி கடையை நடத்தி வருவதாக கூறினார்.விலை வாசி உயர்ந்து உள்ள இந்த காலகட்டத்தில் 10 ரூபாய்க்கு வயிறு நிறைய உணவு கொடுக்கும் இந்த கடை பசித்தர்வர்களுக்கு தாயாக உள்ளது.

Published by
murugan
Tags: idlionerupee

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

7 hours ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

7 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

8 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

9 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

9 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

9 hours ago