“இவரது மறைவு நாட்டுக்கும் கலைக்கும் பேரிழப்பாகும்” – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

Published by
Edison

சென்னை:புகழ்பெற்ற நடனக் கலைஞர்களில் ஒருவரான பண்டிட் பிர்ஜூ அவரது மறைவு நாட்டுக்கும் கலைக்கும் பேரிழப்பாகும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் புகழ்பெற்ற நடனக் கலைஞர்களில் ஒருவரான(கதக் மேஸ்ட்ரோ) பண்டிட் பிர்ஜூ மகராஜ் உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார்.அவருக்கு வயது 83. இதனையடுத்து,அவரது மறைவுக்கு பிரதமர் மோடி,நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,பண்டிட் பிர்ஜூ அவர்களின் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

“பழம்பெரும் கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.அவர் கலையின் சிறந்த தூதராக இருந்தார் மற்றும் அவர் ஒரு வளமான பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார்.

அவரது மறைவு நாட்டுக்கும் கலைக்கும் பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”,என்று கூறியுள்ளார்.

பண்டிட் பிர்ஜூ அவர்கள் பத்ம விபூஷன் விருது மற்றும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற “உனைக் காணாது நான்” என்ற பாடலுக்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார்.அவர் ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் இசையை நடைமுறைப்படுத்தி ஒரு பாடகராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

9 minutes ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

35 minutes ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

2 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

2 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

10 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

11 hours ago