தமிழகத்தில் முதன் முதலாக கொரோனாவில் இருந்து மீண்ட ஒருவர் தனது பிளாஸ்மாவை தனமாக வழங்கியுள்ளார்
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த ஒருவர் குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தனது பிளாஸ்மாவை தானமாக வழங்கியுள்ளார். தமிழகத்தில் முதன் முதலாக ஒருவர் தனது பிளாஸ்மாவை தனமாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவில் இருந்து குணமடைவரின் ரத்தத்தில் கொரோனா வைரஸிற்கு எதிரான ஆன்டிபாடிகள் சுரந்திருக்கும். இதனால் கொரோனா வைரஸில் இருந்து மீண்டவர் குறிப்பிட்ட நாளுக்கு ( 28 நாட்கள் ) பிறகு எந்த வித பாதிப்பும் இன்றி நல்ல உடல் நலத்தோடு இருந்தால் ரத்த தானம் அளிக்கலாம்.
அந்த ரத்ததில் இருந்து பிரித்து எடுக்கப்படும் பிளாஸ்மாவின் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். பிளாஸ்மா பிரித்து எடுக்கப்பட்டவுடன் அந்த ரத்தமானது மீண்டும் பிளாஸ்மா தானம் அளித்தவரின் உடலுக்கே திருப்பி செலுத்தப்படும்.
இந்த பிளாஸ்மா சிகிச்சைக்கு தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் உள்ள இரு மருத்துவமனைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…