வேலூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன்.அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை ஒரு தலையாக கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்து காதலித்து வந்துள்ளார்.
ஆனால் அந்த பெண்ணிற்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகி உள்ளது. இதனை அறிந்த ஜெகன் தனது காதலை அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.இதனை அந்தப் பெண் ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படும் நிலையில் அப்பெண் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
அவரை பின் தொடர்ந்த அந்த வாலிபர் திடீரென ஓடும் பேருந்தில் வைத்து அப்பெண்ணிற்கு தாலிக் கட்டியுள்ளார்.இந்நிகழ்வை சற்றும் எதிர்பாராத அப்பெண் கத்தி கூச்சலிடவே பேருந்தில் இருந்த மற்ற சக பயணிகள் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து வாணியம்பாடி போலீசில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் வாணியம்பாடி போலீசில் புகார் அளித்துள்ளார்.இதனால் போலீசார் ஜெகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிகழ்வு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…