வருகிற ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி முதல் சென்னை பல்கலைக்கழகம் தனது கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த முடிவு.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதும் அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்கள் வெளியில் செல்லவே பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் இந்தியா முழுவதும் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில், தற்போது ஆறாம் கட்ட ஊரடங்கு நாளை தொடங்கி ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை பல்கலைக் கழகம் தனது ஆன்லைன் வகுப்புகள் பற்றிய அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதாவது சென்னை பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட அனைத்து கல்லூரிகளும் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் இரண்டாம் மூன்றாம் ஆண்டு இளநிலை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்க உள்ளதாக உத்தரவிட்டுள்ளது. மேலும் முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் எனவும், இளநிலை மாணவர் சேர்க்கை செப்டம்பர் பத்தாம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் முதலாமாண்டு சேரக்கூடிய மாணவர்களுக்கு ஆகஸ்ட் 19-ஆம் தேதி ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும் என அறிவித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகள் வைத்து வருகை பதிவினை கணக்கிடவும், தொழில்நுட்ப வசதிகள் அனைத்தையும் ஆசிரியர்களுக்கு கல்லூரி நிர்வாகங்கள் செய்து தரவேண்டும் எனவும் கல்லூரிகளுக்கு சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…