வழிபாட்டு தலங்கள் திறப்பு? சமய தலைவர்களுடன் இன்று தலைமை செயலாளர் ஆலோசனை.!

Published by
பாலா கலியமூர்த்தி

சமய வழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம் என்பது பற்றி சமய தலைவர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக ஊரடங்கால் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனிடையே இந்த 5 ஆம் கட்ட ஊரடங்கில் வரும் 8ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், இதுபற்றி சமய தலைவர்களுடன் ஆலோசனை நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, சமய தலைவர்களுக்கு தலைமை செயலாளர் சண்முகம் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கால் மூடப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்களை வரும் 8ம் தேதி முதல் திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்நிலையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள சமய வழிபாட்டுத் தலங்களை எப்போது திறக்கலாம் என்றும்  அவ்வாறு திறக்கும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றியும் கருத்துக்களை பெற 3ம் தேதி (இன்று) மாலை 4.45 மணிக்கு சென்னை தலைமை செயலகம், பழைய கட்டிடம் 2வது தளத்திலுள்ள கூட்ட அரங்கில் சமய தலைவர்களுடன் எனது தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தவறாமல் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

6 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

6 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

7 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

7 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

10 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

11 hours ago