எதிர்க்கட்சி தலைவர் தேர்வு – சட்டப்பேரவை செயலாளரிடம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடிதம்.!

எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை தமிழக சட்டப்பேரவை செயலாளரிடம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் சுமார் 3 மணிநேரமாக நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது குறித்து தமிழக சட்டப்பேரவை செயலாளரிடம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடிதம் வழங்கியுள்ளது. இதில், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி முனுசாமி உள்ளிட்டோர் சட்டப்பேரவை செயலாளரிடம் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை வழங்கியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சி.., அதில் பாஜக அங்கம் வகிக்கும்” – அமித்ஷா மீண்டும் உறுதி.!
June 27, 2025
”உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து.., இப்போ எப்படி இருக்கு? – விருதுநகர் முன்னாள் ஆட்சியர் பதிவு.!
June 27, 2025