எதிரிகளின் கனவு பலிக்காது., தேர்தலுக்காக மட்டுமே பாஜகவுடன் கூட்டணி – முதல்வர் பழனிசாமி

Published by
பாலா கலியமூர்த்தி

பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தால் சரி, அதிமுக கூட்டணி வைத்தால் தவறு என சொல்வதா என முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் இன்னும் ஒரு சில வாரங்களில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் என மும்மரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்தவ கையில்அதிமுக பொறுத்தவரை தொகுதி பங்கீடு நிறைவடைந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் வாழப்பாடியில் இன்று மாலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். அங்கு ஏற்காடு தொகுதி வேட்பாளர் சித்ராவை ஆதரித்து மாலை 5 மணியளவில் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார் என கூறப்பட்டது. இந்த நிலையில், தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதல்வர் பழனிசாமி, பல துறைகளை சேர்ந்தவர்களும் பயனடையும் வகையில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது என தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சிக்கு மீண்டும் வந்தால் போக்குவரத்துக்கு நெரிசல் இல்லாத நகரமாக சென்னையை மாற்றுவோம் என்றும் அதிக நீர்ப்பாசனம், குடிநீர் திட்டங்களை நிறைவேற்றுவோம் எனவும் கூறியுள்ளார். அதிமுகவை அழிக்க நினைக்கும் எதிரிகளின் கனவு ஒருபோதும் பலிக்காது. அதிமுகவின் நான் பயணித்த காலம் கடினமான காலம் என்று பிரபல தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்துள்ளார்.

மேலும், அதிமுகவை வைத்து தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க நினைப்பதாக கூறுவது முற்றிலும் தவறு. பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தால் சரி, அதிமுக கூட்டணி வைத்தால் தவறு என சொல்வதா என கேள்வி எழுப்பி, தேர்தலுக்காக மட்டுமே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது, சித்தாந்த அடிப்படையில் அல்ல என கூறியதாக கூறப்படுகிறது. மத்தியில் உள்ள கட்சியுடன் கூட்டணி வைத்தால் தான் மாநிலத்தில் பல திட்டங்களை கொண்டு வர முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது திமுக, மீனவர்கள் மீது அக்கறையில்லை” – இபிஎஸ் விமர்சனம்!

“கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது திமுக, மீனவர்கள் மீது அக்கறையில்லை” – இபிஎஸ் விமர்சனம்!

சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…

14 minutes ago

“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று…

1 hour ago

பீகாரில் ஆகஸ்ட் 1 முதல் இலவச மின்சாரம் – நிதிஷ்குமார் அறிவிப்பு.!

பீகார் : இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் அரசு…

1 hour ago

எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!

டெல்லி : கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். அதில்…

2 hours ago

ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம்: பாஜகவினர் பணப்பட்டுவாடா செய்தது உறுதி – சிபிசிஐடி.!

நெல்லை : 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்,…

3 hours ago

‘ஹாரி பாட்டர்’ நடிகைக்கு வாகனம் ஓட்ட இடைக்கால தடை.! ஏன் தெரியுமா.?

லண்டன் : 'ஹாரி பாட்டர்' படத் தொடரில் ஹெர்மியோன் கிரேன்ஜர் வேடத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன்…

3 hours ago