பண்ணை வீட்டில் ஓபிஎஸ் முகாம்..! குவியும் ஆதரவாளர்கள்..!

Published by
murugan

தேனியில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஓ. பன்னீர் செல்வம் முகாமிட்டுள்ளார். இதைதொடர்ந்து, பண்ணை வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பில் வருகின்ற தேர்தலில் யார் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்த நிலையில்,  கடந்த திங்கள்கிழமை அதிமுக  நடைபெற்றது .

செயற்குழுக் கூட்டம் முடிந்த பின்னர் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை வருகின்ற 7-ஆம் தேதி அறிவிக்கப்படும் என அக்கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டது. இந்த செயற்குழு கூட்டத்திற்கு பிறகு, 3 நாள் கழித்து நேற்று தான் முதல்வர் , துணை முதல்வர் இருவரும்  சந்தித்தனர். நேற்று  மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு முதல்வர், துணை முதல்வர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர், காமராஜர் நினைவு தினம் என்பதால் கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.இந்த சந்திப்பின் போது, வணக்கம் சொல்லி கொண்டனர். ஆனால், பேசிக் கொள்ளவில்லை. இதையடுத்து, ஓபிஎஸ் சாலை மார்க்கமாக தனது காரில் தேனிக்கு புறப்பட்டார். வழியில் எங்குமே ஓ.பி.எஸ்.க்கு வரவேற்பு தரப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த வாரம் நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ளாமல் தனது வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர்,  மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன், முதல்வர் நடத்திய ஆலோசனை கூட்டத்திலும் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Published by
murugan
Tags: #OPS

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

4 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

5 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

5 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

6 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

6 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

7 hours ago