நிபந்தனை இன்றி செயல்படும் குவாரிகளால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் கவலை அளிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி சூளகிரி அருகே இரண்டு கிராமங்களில் பள்ளி அருகே செயல்படும் குவாரிகளை கட்டுப்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.குவாரிலிருந்து வெளியேறும் தூசி கலந்த நச்சுப் புகையால் குழந்தைகளின் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழகத்தில் கல் குவாரிகளை அனுமதிக்கும் போது கடுமையான நிபந்தனைகளை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட குவாரிகள் மட்டுமே செயல்படுவதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு, மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்குவாரிகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்படுகிறதா..? என்பதை உறுதி செய்ய ஆய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தல். கல் குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிபந்தனை இன்றி செயல்படும் குவாரிகளால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் கவலை அளிப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், குவாரிகளில் இருந்து வெளியேறும் புகையில் நச்சுத்தன்மை இருக்கிறதா என்பதையும் சோதனை செய்யவும், இந்த பிரச்சனை தொடர்பாக இரு கிராமங்களிலும் ஆட்சியர் விசாரணை நடத்த உத்தரவிட்டு வழக்கை வருகிற செப்டம்பர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…