‘நமது முதலமைச்சர் விஜயகாந்த்’- எல்.கே.சுதீஷின் பதிவால் பரபரப்பு…!

Published by
லீனா

தேமுதிகவின் துணைச் செயலாளரான எல்.கே.சுதீஷ் தனது முகநூல் பக்கத்தில், ‘நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு என பதிவிட்டுள்ளது அரசியல் களத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கி உள்ளது. இந்நிலையில் அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணியில் தொகுதி பங்கீடு விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு அமைச்சர் தங்கமணி இல்லத்தில் அதிமுக கூட்டணியில் தேமுதிக உடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் அனகை முருகேசன், பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது, பாமகவுக்கு இணையாக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என தேமுதிகவினர் கேட்டுள்ளனர்.

ஆனால் தேமுதிகவுக்கு 12 தொகுதிகளை மட்டுமே அளிக்க அதிமுக முன்வந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு தேமுதிகவினர் வரவில்லை என்று கூறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தேமுதிகவின் துணைச் செயலாளரான எல்.கே.சுதீஷ் தனது முகநூல் பக்கத்தில், ‘நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு என பதிவிட்டுள்ளது அரசியல் களத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறுமா அல்லது நிலைத்து நிற்குமா என்ற எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Published by
லீனா

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

60 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

2 hours ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

2 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

3 hours ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

4 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

5 hours ago