எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என எழுதி வாசலில் மாட்டுங்கள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடக்க இருப்பதால், தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. தேர்தலில் பணம் புழங்க கூடாது என்று பல்வேறு இடங்களில் காவல்துறை குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளது.
அதன்படி, தமிழகத்தில் சில இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத பல பணங்கள் மற்றும் பரிசு பொருட்களை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்க கூடாது என்றும் வாக்காளர்கள் பணம் வாங்க கூடாது எனவும் அறிவுறுத்தி வருகின்றனர். ஓட்டுக்கு பணம் வாங்கி தங்கள் உரிமைகளை விற்காதீர்கள் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மானமிகு தமிழர்க்கோர் விண்ணப்பம், ஓர் அட்டையில் “எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என எழுதி வாசலில் மாட்டுங்கள் என்றும் நாய் நரிகள் நம்மை அணுகாதிருக்கட்டும் எனவும் கூறியுள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…