“எமது தலைவருக்கு ‘தமிழன்’ சான்றிதழ் எதுவும் தேவையில்லை” – எம்பி ஜோதிமணி பதிலடி!

Published by
Castro Murugan

எமது தலைவர் ராகுல்காந்தி பிறப்பால் தமிழராக இல்லாமல் இருக்கலாம்.ஆனால் உணர்வால்,உள்ளத்தால் தமிழர் எனவும்,எமது தலைவருக்கு ‘தமிழன்’ சான்றிதழ் எதுவும் தேவையில்லை எனவும் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தின்போது நேற்று பேசிய வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும்,கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி,மாநில உரிமைகளை எவ்வாறு காப்பது? என்று ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.மேலும்,உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில்,நாடாளுமன்றத்தில் தங்களின் எழுச்சியூட்டும் உரைக்கு அனைத்துத் தமிழர்கள் சார்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து,இது தொடர்பாக இன்று பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ராகுல்காந்தி தமிழர் என்று சொல்வதற்கே முகாந்திரம் இல்லை. ஒட்டுமொத்தமாக திமுகவுடன் சேர்ந்து தமிழ் இனத்தையே கொன்றவர்கள். இதை வரலாறே மன்னிக்காது. ஒன்றரை லட்சம் தமிழர்களின் ஆன்ம மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ் இனத்தையே கொன்றுவிட்டு, இன்றைக்கு தமிழன் தமிழன் என்று பேசினால் தமிழன் நம்பவே மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில்,எமது தலைவர் ராகுல்காந்தி பிறப்பால் தமிழராக இல்லாமல் இருக்கலாம்.ஆனால் உணர்வால்,உள்ளத்தால் தமிழர் எனவும்,எமது தலைவருக்கு ‘தமிழன்’ சான்றிதழ் எதுவும் தேவையில்லை எனவும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

“தமிழன் என்றால் சுயமரியாதை,வீரம்,ஈகைமோடியரசிடம், அடிமையாகக் கிடக்கும் அதிமுக தமிழன் பற்றியெல்லாம் பேசலாமா? எமது தலைவர் ராகுல்காந்தி பிறப்பால் தமிழராக இல்லாமல் இருக்கலாம்.ஆனால் உணர்வால் ,உள்ளத்தால் தமிழர்.தமிழினத்தின் அடையாளமான சுயமரியாதை,வீரம்,ஈகையின் இலக்கணம்.

நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. அவர் மீதும் அவர் குடும்பத்தின் மீதும் தமிழினம் அன்பைப் பொழிகிறது. அதிமுகவிடம் இருந்து எமது தலைவருக்கு ‘தமிழன்’ சான்றிதழ் எதுவும் தேவையில்லை”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

16 minutes ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

47 minutes ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

3 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

4 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

4 hours ago