மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து தொடர்பாக மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை மதுரையில் புதியதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. மதுரையில் புதுநத்தம் சாலையில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான ஆகாஷ் சிங் என்ற தொழிலாளி உயிரிழந்தார்.
இந்நிலையில், மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து தொடர்பாக பணிகளை மேற்கொள்ளும் நிறுவன திட்ட பொறுப்பாளர் பிரதீப் ஜெயின், பொறியாளர் சத்தியேந்தர் வர்மா, ஹைட்ராலிக் மெஷின் ஒப்பந்ததாரர் பாஸ்கரன் ஆகியோர் மீது தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த மேம்பாலம் பணியானது மத்திய ,மாநில அரசுகள் இணைந்து நிதி ஒதுக்கீடு செய்துதான் கடந்த 3 ஆண்டுகளாக இங்கு பாலம் பணிகள் நடைபெற்று வருகிறது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…