“ஆங்கிலம் முன்னேற்றத்திற்கான உலகளாவிய கருவி” – அன்பில் மகேஸ்.!
மத்திய உள்துறை அமைச்சர் கருத்துக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை : ஆங்கிலம் பேசுபவர் வெட்கபட வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 19ம் தேதி புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் ‘மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ” நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள், அத்தகைய சமூகம் உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்று கூறியிருந்தார்.
இவரது கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கடமையாக விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் பக்கத்தில், ”இந்தியாவில், அமித்ஷாவும் ஆர்.எஸ்.எஸ்-ம் ஒரு காலத்தில் சமஸ்கிருதம் இருந்ததைப் போலவே, இப்போது மக்களுக்கு ஆங்கிலத்தை எட்டாமல் வைத்திருக்க விரும்புகிறார்கள்.
ஆங்கிலத்தை உயர்குடியினருக்கானதாக சித்தரிக்க விரும்புகிறார்கள், ஏழைகள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் எழுச்சி பெற ஆங்கிலம் அதிகாரம் அளிப்பதாலேயே இதை செய்கிறார்கள். ஆங்கிலம் காலனித்துவ நினைவுச்சின்னம் அல்ல, அது முன்னேற்றத்திற்கான உலகளாவிய கருவி.
சீனா, ஜப்பான், கொரியா, இஸ்ரேல் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் அதை ஒரு காலனித்துவ தொந்தரவாக அல்ல, மாறாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத்தில் முன்னிலை வகிக்கக் கற்பிக்கின்றன. அதன் வலுவான தேசிய பெருமையுடன் கூடிய சீனா கூட, ஆங்கிலத்தை வளர்ச்சிக்கு அவசியமானதாகக் கருதுகிறது.
ஆனால் இந்தியாவில், அமித் ஷாவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் ஆங்கிலத்தை உயர்குடியினராக சித்தரிக்க விரும்புகிறார்கள். அடையாளத்துக்கு தமிழ், வாய்ப்புக்கு ஆங்கிலம் என்ற கொள்கையையே தமிழ்நாடு பின்பற்றுகிறது. மொழி என்பது வளர்ச்சிக்கான ஏணியாக இருக்க வேண்டுமே அன்றி, தடைக் கல்லாகஇருக்கக் கூடாது. பல நாடுகளும் ஆங்கிலத்தை அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத்தில் முன்னிலை வகிக்கக் கற்பிக்கின்றன.
திமுகவில், அனைவருக்கும் அணுகல் – தமிழ் அடையாளத்திற்காகவும், ஆங்கிலம் வாய்ப்பிற்காகவும் நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டும் கிடைக்கின்றன. ஏனென்றால் மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது, ஒரு ஏணியாக இருக்க வேண்டும்” என்று கடுமையாக சாடியுள்ளார்.
English is no longer a colonial relic — it’s a global tool of progress. Nations like China, Japan, Korea and Israel and Germany teach it not as some colonial hangover, but to lead in science, tech, and trade. Even China, with its strong national pride, sees English as essential… pic.twitter.com/obeKbCjmAd
— Anbil Mahesh (@Anbil_Mahesh) June 21, 2025