நெல்லையில் 2 மணிநேரம் ஆக்சிஜன் பற்றாக்குறை – 18 பேர் உயிரிழப்பு!

Published by
Rebekal

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு மணி நேரம் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 18 கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில், திருநெல்வேலியிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் சூழலில் பொதுமக்கள் என்ன செய்வதென்று அறியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 800 படுக்கை வசதிகள் இருக்கிறது.

அனைத்து படுக்கைகளும் நிரம்பிய நிலையில் புதன்கிழமை மாலை 4 மணி அளவில் ஆக்ஸிஜன் முற்றிலுமாக தீர்ந்துவிட்டது என கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த மருத்துவமனைக்கு கங்கைகொண்டன் சிப்காட், வண்ணாரப்பேட்டை, மகேந்திரகிரி, இஸ்ரோ மையம் ஆகிய பல இடங்களிலிருந்து ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு மாலை 6 மணிக்கு ஆக்சிஜன் வினியோகம் சீராக நடைபெற்று உள்ளது. இருப்பினும் இந்த இரண்டு மணிநேர ஆக்சிஜன் பற்றாக்குறையில் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 18 கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…

16 minutes ago

மணிப்பூர்: மியான்மர் எல்லையில் துப்பாக்கிச்சூடு.., ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பலி.!

மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…

39 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் – முதல்வர்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

1 hour ago

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

16 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

17 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

17 hours ago