நெல்லையில் 2 மணிநேரம் ஆக்சிஜன் பற்றாக்குறை – 18 பேர் உயிரிழப்பு!

Published by
Rebekal

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு மணி நேரம் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 18 கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில், திருநெல்வேலியிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் சூழலில் பொதுமக்கள் என்ன செய்வதென்று அறியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 800 படுக்கை வசதிகள் இருக்கிறது.

அனைத்து படுக்கைகளும் நிரம்பிய நிலையில் புதன்கிழமை மாலை 4 மணி அளவில் ஆக்ஸிஜன் முற்றிலுமாக தீர்ந்துவிட்டது என கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த மருத்துவமனைக்கு கங்கைகொண்டன் சிப்காட், வண்ணாரப்பேட்டை, மகேந்திரகிரி, இஸ்ரோ மையம் ஆகிய பல இடங்களிலிருந்து ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு மாலை 6 மணிக்கு ஆக்சிஜன் வினியோகம் சீராக நடைபெற்று உள்ளது. இருப்பினும் இந்த இரண்டு மணிநேர ஆக்சிஜன் பற்றாக்குறையில் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 18 கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

இளைஞர் அஜித்குமார் மரணம்: மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட்.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…

5 minutes ago
இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!

இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!

சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…

20 minutes ago

நெஞ்சை உலுக்கும் காட்சி.., அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கிய வீடியோ.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…

55 minutes ago

போலீஸ் அடித்ததில் அஜித்துக்கு சிறுநீரில் ரத்தம் வந்தது” நேரில் பார்த்தவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…

2 hours ago

அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…

3 hours ago

உங்களுடைய வெற்றியை பார்த்து தந்தை போல் நானும் மகிழ்ச்சி அடைகிறேன் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 'வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி…

3 hours ago