தமிழ்நாட்டில் குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு, இன்று ஒரே நாளில் 22,238 பேருக்கு தொற்று உறுதி. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 22,238 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்தம் கொரோனா பாதிப்பு 33,25,940 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 37,544 ஆக உள்ளது. அதுமட்டுமில்லாமல், இன்று ஒரேநாளில் 26,624 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் குறிப்பிட்ட இடங்களை மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க திமுக முடிவு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி இடங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள் இடையே உடன்பாடு என தகவல் வெளியாகியுள்ளது. 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 4, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கீடு என தகவல் கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 வார்டுகளும், […]
ஒருவருக்கே பதவிகள் வழங்க முடியாது என மதுரை திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு. மதுரை திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கூட்டணி கட்சியுடன் சுமூகமாக தேர்தலை சந்திக்க வேண்டும், வெற்றி முக்கியம் என்பதை இலக்காக நினைத்து பணியாற்ற வேண்டும். ஒருவருக்கே பதவிகள் வழங்க முடியாது. நான் பெற்று, வளர்த்த பிள்ளையாக நினைத்த தகவல் தொழில்நுட்ப அணியை துறந்தேன். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் கட்சிப் […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இட பங்கீடு தொடர்பாக திமுக, காங்கிரஸ் இடையே இன்று மாலை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோருடன் உள்ளாட்சி தேர்தலில் இடங்களை பங்கீடு செய்வது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மண்டலத்திற்கு குறைந்தபட்சம் ஒரு இடமாக கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்று மார்சிஸ்ட் […]
புதிய வகை கொரோனா பற்றிய கவலை தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை வெல்வதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. புதிய வகை கொரோனா பற்றி தேவையற்ற பீதி வேண்டாம். மூன்றாவது அலையில் முதியவர்கள் தான் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டு, உயிரிழந்துள்ளனர். அடுத்த சில வாரங்களில் கொரோனா தொற்று […]
அ.தி.மு.க. தலைமையினால், கடந்த 10 ஆண்டுகளில் பட்ட பாட்டை நினைவுபடுத்துங்கள் என்று தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மடல். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் பிப்ரவரி 19-ஆம் தெத்து ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 28-ஆம் தேதி […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி 10 லட்சம் நிதி உதவி அளித்தார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தார். அந்த பள்ளி அருகே உள்ள விடுதியில் அவர் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த ஜனவரி 9-ஆம் தேதி அந்த மாணவி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில் 19ஆம் தேதி […]
விருதுநகர் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு, முதலமைச்சர் ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை அறிவித்தார். விருதுநகர் அருகே நாட்டார் மங்கலம் பகுதியில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான பொம்மி பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. பட்டாசு தயாரிக்கும் பணிகள் முடிந்த பிறகு, மீதம் உள்ள கழிவுகளை எரிக்கும் பணியில் ஆறுமுகம், தெய்வேந்திரன் குபேந்திரன் ஆகிய 3 பேர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, திடீரென உராய்வினால் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், இருவர் மருத்துவமனையில் […]
நாகப்பட்டினம் உட்பட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் தென் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . மேலும், தமிழகத்தின் நாகப்பட்டினம், திருவாரூர், […]
பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் சென்னையில் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பிப்ரவரி 1 முதல் சென்னையில் உள்ள கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைக்குச் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளதால் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட இரவு ஊரடங்கு , முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் பாமக சென்னையில் போட்டியிடும் பாமக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட பாமக முடிவு செய்துள்ளது. சென்னை மற்றும் சேலத்தில் போட்டியிடும் உள்ள பாமகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பாமக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் ஜி.கே மணி, சென்னை மாநகராட்சி 700 ஆடுகளுக்கு 200 வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் பாமக கட்சிக்கு […]
கோட்சேக்களின் வன்முறையை, வெறுப்பை, பிரிவினைவாதத்தை அகிம்சை, அன்பு, ஒற்றுமையால் வெல்லும். தேசப்பிதாவிற்கு என் அஞ்சலி என ஜோதிமணி எம்.பி ட்வீட். இன்று மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது வரும் நிலையில், அரசியல் பிரபலங்கள் பலரும் காந்தியடிகளை போற்றும் வண்ணம் சமூக வலைதள பக்கங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கோட்சேக்களால் ஒருபோதும் காந்தியின் ஆன்மாவைக் கொல்ல முடியாது.அது இந்த தேசத்தோடு இரண்டறக் கலந்துவிட்டது.இந்த தேசம் […]
மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினத்தையொட்டி, மானுடத்தைக் காக்குமொரு மகத்தான தத்துவமாக காந்தி காற்றோடு கலந்த நாள் இன்று. உலகெங்கிலும் காந்தியர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள் என கமலஹாசன் ட்வீட். இன்று மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது வரும் நிலையில், அரசியல் பிரபலங்கள் பலரும் காந்தியடிகளை போற்றும் வண்ணம் சமூக வலைதள பக்கங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மானுடத்தைக் […]
மகாத்மா காந்தியின் நினைவுதினத்தை முன்னிட்டு, கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமை செயலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் மற்றும் முக்கிய அதிகாரிகள் அவரது உருவச்சிலைக்கு மலர்தூவி மரியாதை […]
காந்தியடிகளின் 75-வது நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. காந்தியடிகளின் நினைவு நாளானது விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 30-ஆம் தேதி “தியாகிகள் தினம்” ஆக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், காந்தியடிகளின் 75-வது நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை காமராஜர் சாலையில் காந்தி சிலை கீழ் மகாத்மா காந்தி […]
மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் 5-வது பட்டியலை கமலஹாசன் அவர்கள் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, தேர்தல் பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் 5-வது பட்டியலை கமலஹாசன் அவர்கள் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நகர்ப்புற […]
மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினத்தையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு, காலை 10 மணியளவில் தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் பல அதிகாரிகள் மரியாதை செலுத்த உள்ளனர். மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமை செயலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிலையில், காந்தியின் உருவச்சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்த உள்ளனர். அதன்படி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது […]
,நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் நினைவுநாளில், அனைவரும் அன்பு மேலோங்கி அறவழியில் நடக்க உறுதியேற்போம் ஈபிஎஸ் ட்வீட். மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, மகாத்மா காந்தியின் செயல்களை போற்றும் வகையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்!எனும் உயரிய சிந்தையோடு, அகிம்சை, சத்தியம் எனும் அறவழியை உலகுக்கு அளித்து, இந்திய சுதந்திர வெற்றிக்கு வித்திட்ட மாமனிதர் […]
தமிழ்நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழக்கம் போல ரேஷன் கடைகள் இயங்கும் என நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை நியாயவிலைக்கடைகள் இயங்கவில்லை இதனால், தமிழ்நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழக்கம் போல ரேஷன் கடைகள் இயங்கும் என நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது விநியோக திட்டத்தின்கீழ் ஜனவரி 2022-ம் […]
87-வது நாளாக சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. ஆனால், கடந்த 2 மாதங்களும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து வரும் நிலையில், 87-வது நாளாக சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]